search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்தியப்பிரதேசம் விபத்து"

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இன்று வேகமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் சாலையோரம் நின்றிருந்த டிராக்டர் மீது மோதிய விபத்தில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். #Patientkilled #ambulancehitstractor
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம், மோரேனா மாவட்டம், சபல்கர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தீவிபத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் அருகாமையில் உள்ள குவாலியர் நகர அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு உள்ளூர் டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

    இதைதொடரந்து, அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் இன்று குவாலியர் நகருக்கு அழைத்து சென்றனர்.

    மோரேனா - ஷிவ்புரி சாலை வழியாக வேகமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டிராக்டரின் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த கோர விபத்தில் தீக்காயம் அடைந்த ராம்பாபு தகட்(47), அவரது தாயார் ரம்பாட்டி(70), ஆம்புலன்ஸ் டிரைவர் சல்மான்(49) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். #Patientkilled #ambulancehitstractor 
    ×